கணவர் வேலைக்கு செல்லாததால் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை.. கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரம் ,ரேணுகா தேவி கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார்.கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீ லட்சுமி ( வயது 20) இவர்களுக்கு 27 -11- 20 22 அன்று திருமணம் நடந்தது. இவரது கணவர் கடந்த 2நாட்களாக வேலைக்கு செல்லவில்லை,இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஸ்ரீ லட்சுமி நேற்று அவரது வீட்டில்சுடிதார் சால்வையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்..,இது குறித்து இவரது தந்தை ராஜேந்திரன் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கணவர் வேலைக்கு செல்லாததால் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை..
