திருமணமான இளம்பெண் கள்ளகாதலனுடன் ஓட்டம்.!!

கோவை ஒண்டிப்புதூர், பண்ணாரி அம்மன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து .இவரது மனைவி மைதிலி ( வயது 25) இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மைதிலி நொய்யல் நகரை சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் கள்ளகாதல் வைத்து இருந்தார். கடந்த 9 – ந் தேதி கள்ளக்காதலுடன் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர் மாரிமுத்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் முனியம்மாள் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.