மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த3பேர் கைது…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி -கோட்டூர் ரோட்டில் உள்ள ரயில்வே பாலத்துக்கு அடியில்பொள்ளாச்சி கிழக்கு பகுதிபோலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 6.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இதை யடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பக்கம் உள்ள கே.. தங்கம்மாள்புரத்தை சேர்ந்த ராஜா (வயது 28) கேரள மாநிலம் மலப்புரம் வினில் (வயது 28) நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, மேல பட்டம் சங்கர் ( வயது 24)என்பது தெரியவந்தது.இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பொள்ளாச்சி பகுதியில் உள்ள மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.