கோவைக்கு வந்த அபுதாபி விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.5 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்.!!

கோவை விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை நாள் தோறும் நடக்கிறது. இதில் இன்று அதிகாலையில் அபுதாபியில் இருந்து தொன்னூறு பயணிகள் மற்றும் உடமைகளை ஏறறிக் கொண்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இதனிடையே அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் தடை செய்ய பட்ட பொருட்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைக்கிறது .அதன் படி விமான நிலைய போலீஸாருடன் நுண்ணறிவு அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு பயணியின் உடமையில் கட்டுகட்டாக ஐம்பது வெளி நாட்டு சிகரெட் பாக்கெட்கள் இருந்தது கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து ரூபாய் 1.5 லட்சம் மதிப்புள்ள வெளி நாட்டு சிகரெட் பாக்கெட்களை பறிமுதல் செய்து  பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை கண்ட மற்ற பயணிகள் அதிகாலை நேரம் என்பதால் சற்று பதட்டம் அடைத்தனர். தொடர்ந்து பிற பயணிகளின் உடமைகளை நவீன கருவிகள் மூலம் சோதனை நடத்தினர்..