ஒரு மாதத்தில் 24 மோசடி வழக்குகளில் 1.50 கோடி மீட்பு..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அருண் . இவர் நேற்று கூறியதாவது:- ஆன்லைன் மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் (ஜூன்) மோசடி தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 570 புகார் மனுக்கள் பெறப்பட்டன . அதன் மீது போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தனர் . இதில் 24 வழக்குகளில் ரூ.1 கோடியே 50 லட்சம் மீட்கப்பட்டு நீதிமன்ற மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.