கூல்ட்ரிங்க்ஸ் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம் – ஐடி ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!

ஈரோட்டை சேர்ந்தவர் சிபிராஜ் ( வயது 34 )ஐ. டி. ஊழியர் இவரின் திருமணத்திற்கு இணையதளம் மூலம் வரன்தேடினர். அப்போது கோவை துடியலூர்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருவீட்டினரும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய சிபின் ராஜ் பெற்றோர் மறுத்தனர். இதேபோல் பெண் வீட்டாரும் சம்மதிக்கவில்லை. ஆனாலும் சிபிராஜ் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி தொடர்ந்து பேசி வந்தார் .மேலும் அவர் பெற்றோரின் எதிர்ப்பு மீறி திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் ஆசைவாரத்தை கூறினார் .அவர் கடந்த 20 20 ஆம் ஆண்டு கோவை வந்து அந்தப் பெண் தனியாக இருந்த போது சந்தித்தார். அப்போது அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத் தார்.சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கியதும் சிபிராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்ததும்தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் . அப்போது அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக சிவராஜ் சமாதானம் செய்தார். நானும் அவர் சில மாதங்கள் கழித்து அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார் இது குறித்து துடியலூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் 20 20 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி சிவராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. கோவை மகளிர் கோர்ட் டில்இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். நந்தினி தேவி குற்றம் சாட்டப்பட்ட சிபிராஜுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜீ ஷாஆஜராகி வாதாடினார்.