கொலை வழக்கில் கைதானவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை ரத்தினபுரி,தயிர் இட்டேரி ரோட்டில் உள்ள மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் தேவராஜ் (வயது 38)..இவர் 20 22 ஆம் ஆண்டுஅதே பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிய வந்தார் .இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்தநீதிபதி விவேகானந்தன் குற்றம் சாட்டப்பட்ட தேவராஜ்க்கு 10 ஆண்டு சிறைதண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார் .இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.