10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் – முதியவர் போக்ஸோவில் கைது..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் ஊராட்சி அய்த்தாம்பாளையம் பகுதியிலிருந்து சாத்தனூர் அரசு பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவியிடம் 500 ரூபாய் பணத்தை காட்டி ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அய்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 57) என்ற நபரை செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.

சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட அய்த்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 57) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியிடம் 500 ரூபாய் நோட்டை காண்பித்து ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் பாலியல் சீன்டலில் ஈடுபட்டதாக மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் சாத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்தனர் மாணவி வழக்கு என்பதால் வழக்கு செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு மாற்றப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கோவிந்தராஜை போக்சோ வழக்கில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.