லிவிங் ரூமில் பதுக்கி வைத்த 115 மது பாட்டில்கள் பறிமுதல் – மானேஜர் கைது.!!

கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ” லிவிங் ரூமில் ” பீளமேடு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 115 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக லிவிங் ரூம் மேனேஜர் ரத்னபுரி நாராயணன் ( வயது 38 ) கைது செய்யப்பட்டார் . அதன் உரிமையாளர் கிருஷ்ண விஜய், பங்குதார வேலு தலைமறைவாகி விட்டனர்.