கோவை மாநகரில் 12 இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்..!

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் 12 இன்ஸ்பெக்டர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்இதற்கான உத்தரவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை பிறப்பித்தார்.அதன் விவரம் வருமாறு:- செல்வபுரம் குற்றப்புலனாய் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜேஸ்வரி ராமநாதபுரம் போலீஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் .மண்டல சைபர் கிரைம் ஆய்வக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் இப்ராஹிம் பாதுஷா ரத்தினபுரி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சரவணம்பட்டி சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும்,காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் நிர்மலா குற்றப்பிரிவு (சி.சி. பி) – 1 -க்கும்,இங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர்ருக்மணிகிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், இன்ஸ்பெக்டர் அமுதா மேற்கு பகுதி போக்குவரத்துபுலனாய்வு பிரிவுக்கும், நிர்மலாதேவி சரவணம்பட்டி குற்றப்புலனாய்வுபிரிவிற்கும், மீனாம்பிகை வெரைட்டி ஹால் ரோடு சட்டம் -ஒழுங்கு போலீஸ் நிலையத்துக்கும், இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி உக்கடம் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், உக்கடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் எஸ். ஜே. ஏ .பி பிரிவுக்கும் | மேற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவுஇன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கட்டுப்பாட்டு அறைக்கும் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.