தோட்டத்தில் பதுக்கிய 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..!

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது..போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு 1200 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மாரிமுத்து என்பவர் ரேஷன் அரிசியை கடத்தி வந்து கனகராஜ் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதை பதுக்கியவர்களை தேடி வருகிறார்கள்..