வேனில் 125 கிலோ குட்கா கடத்தல் – 2 வியாபாரிகள் கைது..!

கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட் அருகே இன்ஸ்பெக்டர் சரவணன, சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 125 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேனும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் வீரபாண்டி பக்கம் உள்ள நாயக்கனூரை சேர்ந்த ஜெயக்குமார் ( வயது 43) பேரூர்,ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த ஜவகர் (வயது 24) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் . இது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த பகவான் என்பவரை தேடி வருகிறார்கள்..