குடோனில் பதுக்கிய 133 கிலோ குட்கா பறிமுதல் – வடமாநில வியாபாரி கைது..!

கோவை பேரூர் காவல் நிலைய ,எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்களை (குட் கா ) விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயண உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடமான சுண்டக்காமுத்தூர், சிக்கன் வீதி பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர் . அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுண்டக்காமுத்தூர், சிக்கன் வீதியை சேர்ந்த வட மாநில வியாபாரி சங்கர்லால் மகன் ஜூஹார்மல்(வயது 43) என்பவரை கைது செய்தனர்.. அவரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள சுமார் 133 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..