14 கிலோ குட்கா பறிமுதல் – 3 பேர் கைது.!!

கோவை கடைவீதி காவல் நிலையஇன்ஸ்பெக்டர் சசிகலா, சப் – இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் நேற்றுஉக்கடம் புல்லுக்காடு இறக்கம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பேக்கரி அருகேதடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்து கொண்டிருந்ததாக தெற்கு உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்த மூசா (வயது 44) சாரமேடு ரோடு,ராஜிவ் நகர் தஸ்தகீர் (வயது 44) வைரம் நகர் நாகூர் மீரான் (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .14 கிலோகுட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.