சூலூரில்14 வயது சிறுமி கர்ப்பம் – போக்சோவில் சிறுவன் கைது..!

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வருகிறாள். அவளுக்கு 2 நாட்கள் முன்பு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது.இதையடுத்து பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சிறுமியிடம் விசாரித்த போது அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதில் சிறுமி கர்ப்பமானார் .இது குறித்து சிறுமியின் பெற்றோர் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் அந்த சிறுவனை நேற்று கைது செய்தனர். அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்..