140 போதை மாத்திரைகள் , கஞ்சா பறிமுதல் – இருவர் கைது.!!

கோவை மதுவிலக்கு அமுல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் நேற்று மாலை உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள சிவராம் நகர் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் புது பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1500 கிராம் கஞ்சா 140 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், போதை மாத்திரைகளும், இரு சக்கர வாகனமும் ,2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் திருச்சி ரோடு ,ஹைவேஸ் காலனியை சேர்ந்த ஜான் ஜோசப் (வயது 33) பீளமேடு பயோனியர் மில் ரோட்டை சேர்ந்த அஜித்குமார் ( வயது 26) என்பது தெரிய வந்தது .இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது..