ஆவடியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 153 கேடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது ..!

ஆவடி :

ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர் குற்றச்சம்பழங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீது குண்டர் த டுப்பு சட்டம் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டு 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை தொடர் குற்றச்சம்பவ ங்களில் ஈடுபட்டு வந்த 1.கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கில் தொடர்புடைய 47 குற்றவாளிகள் 2.கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 16 கேடிகள்3. போக்கிரிகள் 45 குற்றவாளிகள் 4. போதைப் பொருட்கள் வழக்கில் தொடர்புடைய 37 குற்றவாளிகள் 5. நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய ஒரு கேடி 6.இணையதள குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 கேடிகள் 7. கள்ளச் சந்தை வழக்குகளில் தொடர்புடைய 4 கேடிகள் என மொத்தம் 153 குற்றவாளிகள் மீது குற்ற தடுப்பு நடவடிக்கையாக கு ண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்