16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் – போலீஸ்காரர் கைது..!

பாலக்காடு புதுச்சேரியை சேர்ந்த 16 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்காட்டில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்த அஜீஸ் குமார் என்ற அஜீஸ் (வயது 28) என்பவரை நேற்று கைது செய்தனர்.இவர் ஏற்கனவே மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சம்பந்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..