தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 85 லட்சம் மதிப்பிலான 160 கிலோ கடல் அட்டை மற்றும் 1500 கிலோ பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை ,பீடி, இலைகள், கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு குழும கடல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடல் காவல் நிலைய ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான காவல்துறையினர் மேட்டுப்பட்டி கடற்கரைப் பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு வேனில் இருந்து படகில் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 160 கிலோ கடல் அட்டைகள் 37 பண்டல்களில் சுமார் 45 லட்சம் மதிப்பிலான 1500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் ரூ.85 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை மற்றும் பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் மேலும் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.