ரூ.18 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனை அபேஸ் – காஞ்சிபுரத்தை கலக்கிய குற்றவாளி அதிரடி கைது..!

ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் மத்திய குற்ற பிரிவில் சென்னை அண்ணாநகர் மேற்கு சார்லஸின் மகன் பெரசின் ராஜா கொடுத்துள்ள புகார் மனுவில் திருவள்ளூர் மாவட்டம் மோரை மதுரா வீராபுரம் பகுதியில் அன்னை சுந்திர கண்ணம்மா கார்டனில் 1800 சதுர அடி கொண்ட வீட்டுமனை தன்னுடைய அனுபவத்திலிருந்தததாகவும் 2022 ஆம் ஆண்டு மேலே குறிப்பிட்ட வீட்டு மனையை சென்னை கொளத்தூர் இலக்கியா பில்டர்ஸ் சூப்பர்வைசராக பணியாற்றும் வினோத் குமார் என்பவரிடம் வீட்டு மனையை வைத்து  ஏழு லட்சம் கடனாக கேட்டதாகவும் வினோத் குமார் வேப்பம்பட்டி ல் ஏ வி எஸ் என்டர்பிரைசஸ் ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆல்வான் தகப்பனார் பெயர் நடராஜன் என்பவனும் மற்றும் ரங்கசாமியும் வீட்டு மனையை பவர் எழுதிக் கேட்டதாகவும் ஆல்வான் ப வரை திலீபன் என்பவனின் பெயரில் ரூ 7 லட்சம் கொடுப்பதாக கூறி பவரை பெற்றுக் கொண்டான் ரூபாய்1 லட்சம் மட்டும் பெரசி லின் ராஜாவுக்கு கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளான் இந்த இடத்திற்கான வில்லங்கச் சான்றை பெர சிலின் ராஜா போட்டு பார்த்த போது ஆவடி காந்தி திரு அண்ணா நகர் ஜெயபிரகாஷ் என்பவனின் பெயர் வந்தது 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த வீட்டு மனையை ஏமாற்றி வேறு ஒருவனுக்கு பத்திர பதிவு செய்துள்ளனர் இது குறித்து புகாரின் பேரில் ஆவண நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ஆல் வான் வயது 34 தகப்பனார் பெயர் நடராஜன் கூர ம் காஞ்சிபுரம் என்பவனை அதிரடியாக கைது செய்தனர். நீதிமன்ற காவலுக்கு ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டான் . குற்றவாளி மீது காஞ்சிபுரத்தில் பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன .இவன் இந்த ஏரியாவில் மிகப்பெரிய ரவுடி என்றும் தாதா என்றும் கூறுகிறார்கள்..