ஓய்வு பெற்ற இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில்19 பவுன் நகை திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை புதூர் பிரஸ் , என்கிளேவ் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 62) இவர் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று சேகரும், அவரது மனைவியும் மகளை வெளிநாடு அனுப்புவதற்காக கோவை விமான நிலையம் சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 19 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து சேகர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..