கிணற்றில் வீசி 2 குழந்தைகள் கொலை – தாய் தற்கொலை… ஆனைமலையில் பயங்கரம்.!!

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள தாதூர் பகுதியில் உள்ள தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் அருண்குமார் (வயது 33 )தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுகன்யா ( வயது 30) இவர்களுக்கு தனுஸ்ரீ ( வயது 9 ) என்ற மகளும்,அகிலன் ( வயது 6) என்ற மகனும் உள்ளனர்.இந்த நிலையில் சுகன்யாவின் சித்தி மகள் சித்ராவுக்கு தலையில் கட்டி இருந்தது .அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரை சுகன்யா தனது வீட்டில் தங்க வைத்து கவனித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 10 நாட் களாக சித்ராவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது.இதனால் சுகன்யா விரக்தியில் இருந்தார் .இந்த நிலையில் நேற்று காலையில் சுகன்யா தனது குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்றார் .செல்லும் வழியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் தனுஸ்ரீ, அகிலன் ஆகியோரை தள்ளி கொலை செய்துவிட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்..இது குறித்துஆனைமலை போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலைக்கு வேறு எதுவும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.