ஆட்டோவில் கடத்திய 2 கிலோ கஞ்சா பறிமுதல் – வாலிபர் கைது..!

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் மாக்கினாம்பட்டி அருகேசென்று சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஒரு ஆட்டோவில் கஞ்சாவை விற்பனைக்காககடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஆட்டோவும் 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக பொள்ளாச்சி ,கோட்டூர் ரோடு நேரு நகரைச் சேர்ந்த ஜபருல்லா மகன் ஷேக் பரீத் ( வயது 23 )கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.