திருமணம் முடிந்து 2 மாதத்தில் புதுப்பெண் எங்கோ மாயம..!

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் மாட்டுக்கார சாமி கோவில் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார் .இவரது மனைவி மதுமிதா ( வயது 21) இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.. திருவண்ணாமலையில் வசித்து வந்தனர் .நேற்று முன்தினம் புதுமண தம்பதிகள் சுகுணா புரத்தில் உள்ள மதுமிதாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர்..வீட்டில் வைத்து தனது தாயாரிடம் கணவர் பிரேம்குமரிடம் தனக்கு வாழ விருப்பமில்லை என்று கூறினாராம்.இதை மதுமிதாவின் தந்தை பெருமாள் கண்டித்தார்.இந்த நிலையில் அன்று இரவு பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் தனது துணிமணிகள், சர்டிபிகேட்டுடன் வீட்டிலிருந்து திடீரென்றுமாயமாகிவிட்டார். இது குறித்து தாயார் சரோஜினி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.