ஒரே நாளில் சாலை விபத்தில் 2 பேர் பலி..

கோவை செல்வபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாசம் (வயது 66 )இவர் வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றார். அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்து பலனளிக்காமல் நேற்று இறந்தார்.

இதேபோல குனியமுத்தூர் கிளாசிக் பார்க் பகுதி சென்றவர் முகமது ரபிக் (வயது 34)இவர் நேற்று செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்த தனது நண்பர் சீனிவாசன் (வயது 45) என்பவருடன் ஆட்டோவில் கோவை புதூர், புட்டு விக்கி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்..செங்குளம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு இருவரும் கீழே இறங்கி நின்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ அருகே நின்று கொண்டிருந்த இவர்கள் மீது மோதியது.இதில் முகமது ரபிக், சீனிவாசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் முகமது ரபீக் இறந்து விட்டார்.சீனிவாசன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து கார் ஓட்டி வந்த இடையர்பாளையம் சிவகாமி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜோசப் நிர்மல் (வயது 19)மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..