கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கோவை கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது..!

கோவை இடையர்பாளையம் தேவாங்க நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன். அவரது மகன் சரவணன் ( வயது 35) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு -நாராயண குரு ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர் . அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 300 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர் .இது குறித்து சரவணன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்கு பதிவு செய்து வேலாண்டிபாளையம், தடாகம் ரோடு கொண்ட சாமி நாயுடு வீதியைச் சேர்ந்த தங்கராஜ் என்ற தவ்ஹீத் (வயது 29) இடையர்பாளையம் நெசவாளர் காலனி, சங்கர் ( வயது 20) ஆகியோரை கைது செய்தார். இவர்களில் தங்கராஜ் கூலி வேலையும் , சங்கர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது.