வீடு புகுந்து ஆடு திருடிய 2 பேர் கைது..!

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ருத்ரியாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி முத்தம்மாள் ( வயது 60) இவர் வீட்டில் 10 ஆடுகள் சொந்தமாக வளர்ந்து வருகிறார். நேற்று இரவு இவர் தூங்கிவிட்டார். அப்போது வீட்டில் புகுந்த 2 பேர் அங்கிருந்த ஒரு ஆட்டை திருடி சென்று விட்டனர்.. இது குறித்து முத்தம்மாள் அன்னூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து அன்னூர் வடக்கலூரை சேர்ந்த அருள் பிரகாஷ் (வயது 36 )ருத்திரி யாம் பாளையம்ஞான பிரகாஷ் ( வயது 25) ஆகியோரை கைது செய்தார் ஆடு மீடக்கப்பட்டது. இவர்களில் அருள்பிரகாஷ் கூலி தொழிலாளியாகவும், ஞானபிரகாஷ் டிராக்டர் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..