ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 2 பவுன் செயின் திருட்டு..!

கோவை சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் சவேரியார். இவரது மனைவி ரீட்டா மேரி ( வயது 57) இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வீட்டு வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் வேலைக்கு செல்வதற்காக ஆர்.கே. மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து டவுன்
பஸ்சில் சென்று கொண்டிருந்தார். ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கசெயினை காணவில்லை. யாரோ திருடி விட்டனர். இது குறித்து ரீட்டா மேரி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.