தடுப்புச் சுவரில் கார் மோதி கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாப பலி..

திருப்பூர் மாவட்டம்வேலம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் விஷால் ( வயது 21).இவரது நண்பர்கள் பூபேஷ் ( வயது 19 )நரேன் ( வயது 19) பிரணவ் ( வயது 20)மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது இப்ராகிம் (வயது 20)இவர்கள் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளிலும், பிரணவ் வெளிமாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியிலும் படித்து வருகிறார்கள். நண்பர்களான இவர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கோவையில் சந்தித்தனர் .

இதையடுத்து அவர்கள் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்டு உள்ளனர். அதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் காரில் கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றனர் . இவர்களதுகார் கணியூர்அருகே சென்று கொண்டிருந்தது. காரை விஷால் ஒட்டிச் சென்றார் சுங்கச்சாவடியை கடந்து மேம்பால பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டு இழந்து சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது .இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் கருமத்தம்பட்டி போலீசருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஷால், பூபேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர் பலத்த காயமடைந்த நரேன்,பிரணவ் , மற்றும் முகமது இப்ராஹிம் ஆகியோர் சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.