62 கிலோ குட்காவுடன் 2 வியாபாரிகள் கைது..!

கோவை சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் நேற்று உடையாம்பாளையம் ரோட்டில் உள்ள 2 கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட்கா )இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக சின்ன வேடம்பட்டி சுப்பிரமணியம் நகரை சேர்ந்த மணிகண்டன் ( 45) கணபதி ராஜீவ் காந்தி ரோட்டை சேர்ந்த பாலாஜி (36 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மணிகண்டன் பால் வியாபாமும், பாலாஜி மளிகை வியாபாரமும் செய்து வந்தனர் . இவர்களிடம் இருந்து 62 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது..