பாம்பு கடித்து 2 பெண்கள் பரிதாப சாவு.

கோவை ஏப் 24

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி வளர்மதி (வயது 40) இவர் தாளியூரில்உள்ள இவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரை விஷ பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து இவரது கணவர் செந்தில்குமார் தொண்டாமுத்தூர் போலீசில்புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல காரமடை, காளம் பாளையம்பக்கம் உள்ள தாயனூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி பூங்கொடி (வயது 46) இவர் அங்குள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரதுகாலில் பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் ,இது குறித்து இவரது மகன் அரிகிருஷ்ணன் காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..