பெட்டிக் கடையில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது..!

கோவைஜூலை 6 மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டில் உள்ள டி . ஏ.எஸ் நகரில். ஒரு பெட்டி கடையில் மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் குரு சந்திர வடிவேல்நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) 600 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த மணி என்பவரின் மனைவி அம்மணி ( வயது 62) கைது செய்யப்பட்டார் .இதே போல கருமத்தம்பட்டிபக்கம் உள்ள ஜங்கம நாயக்கன்பாளையத்தில் ஒரு பெட்டிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் 670 கிராம் குட்கா இருந்தது தெரியவந்தது . இது தொடர்பாக காடுவெட்டி பாளையம் ,வீரமாச்சி அம்மன் வீதியைச் சேர்ந்த ரவி மனைவி சுபா (வயது 25 ) கைது செய்யப்பட்டார். குட் கா பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.