வேலைக்கு சென்ற 2 பெண்கள் திடீர் மாயம்..!

கோவை சாய்பாபா காலனி ,கே. கே .புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்.ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வனிதா ( வயது 32)இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 2 – ந் தேதி செந்தில்குமார் அவரது மனைவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவர் வேலை பார்க்கும் வீட்டில் கொண்டு விட்டார்.வேலை முடிந்து அவர் வீட்டுக்கு வரவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் கணவர் புகார் செய்துள்ளார். இதேபோல பீளமேடு எல்லைத் தோட்டம் ரோட்டை சேர்ந்தவர். கணேசன் மூர்த்தி. அவரது மனைவி வனஜா (வயது 47) வீட்டு நர்சாக வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மகள் லட்சுமி பிரியா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.