கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 2 தொழிலாளி பரிதாப பலி..

கோவை ரத்தினபுரி, கண்ணப்பன் நகர், 4-வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 28)வெல்டராக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று முன்தினம் வடவள்ளி கல்வீராம்பாளையம் லட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் 10 அடி உயரத்தில் நின்று வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார்.தலையிலும் கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது..அவரை சிகிச்சை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து அவரது மனைவி மீனா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வெல்டிங் காண்ட்ராக்டர் உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரபிக் ( வயது 47) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போலபீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 27 கட்டிடத் தொழிலாளி. இவர் பீளமேட்டில் உள்ளஒரு தனியார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் 5 – வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரி பிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.