பைக்கில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது..!

கோவை ஜூன் 7 பொள்ளாச்சி கிழக்கு பகுதி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று அங்குள்ள ஜோதி நகர் , பூங்கா பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தார் . அவர்களிடம் 1 கிலோ 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது .இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் சதாம் உசேன் ( வயது 23 )நேரு நகர் முகமது யூசுப் மகன் முஹம்மத் சல்மான் ( வயது 22 ) என்பது தெரிய வந்தது. இந்த கஞ்சாவை திருப்பூரில் இருந்து வாங்கி வந்ததாக விசாரணையில் தெரிவித்தனர்..