சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்.!!

கோவை ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் செந்தில் ( வயது 27)இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இது குறித்து அந்த சிறுமியின் தந்தை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .அதில் செந்தில் அந்த சிறுமி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது .இதை யடுத்து போலீசார் செந்திலை கைது செய்தனர் .இது தொடர்பாக கோவையில் உள்ள  போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது .அதில் குற்றம் சாட்டப்பட்ட செந்திலுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார் .அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ4 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து செந்திலை போலீசார் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர்.