போக்சோ வழக்கில் கைதானவருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை.!!

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 43) இவரை 1-01-2001 அன்று ஆனைமலை போலீசார் 16 -வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .இவர் மீது கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 18 ஆண்டு சிறைத் தண்டனையும், தாக்கியதற்காக ஒரு வருடம் சிறை தண்டனையும், மிரட்டல் விடுத்ததற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும் மொத்தம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரசிதா ஆஜராகி வாதாடினார்..