திருச்சியில் கார்கில் போர் வீரர் மேஜர் சரவணன் 25 ஆம் ஆண்டு நினைவு விழா..!

கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தவர் நமது திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன் அவர்கள். அவரது வீர தீர செயல்களை பாராட்டி இந்திய அரசு பாட்டலிக்கின் கதாநாயகன் என்றும் நம் நாட்டின் உயரிய விருதான வீர் சக்கரா என்ற விருதையும் வழங்கி கௌரவித்தது. அவரது 25 ஆம் ஆண்டு நினைவு விழாவை முன்னிட்டு அவரது நினைவகத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்ய மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை சார்பாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் ராணுவ மற்றும் மாநில உயர் அதிகாரிகள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் மாண்புமிகு அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு  மேயர் அன்பழகன் திருச்சி மாநகராட்சி.
காமினி மாநகர காவல் துறை ஆணையர். கர்னல் சுதீப் சட்டர்ஜி ஸ்டேஷன் கமாண்டர் திருச்சி. கர்னல் சுனில் பட் குரூப் கமாண்டர் என்சிசி திருச்சி. திரு தீரஜ் முரளி ஏரியா சேல்ஸ் மேனேஜர் ஹச் பி சி எல் மதுரை. Fr ஆரோக்கியசாமி சேவியர் , முதல்வர் சென் ஜோசப் கல்லூரி மற்றும் ராணுவ கமாண்டர்கள் அரசியல் பிரமுகர்கள் உயர் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டு மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..