திருச்சி தெற்கு மாவட்டத்தில் 2வது பொது உறுப்பினர்கள் கூட்டம் !

கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற பொது தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற இலக்கை நோக்கி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக, இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை திருச்சி காவேரி பாலம் சிந்தாமணி அருகில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
மாநகரக் கழக செயலாளர் மதிவாணன் தலைமை கோவிந்தராஜன் மாவட்ட அவை தலைவர் முன்னிலை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூட்டத்தில் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன் சேகரன், சபியுல்லா கவிஞர்சல்மா செந்தில் திவ்யா மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் லீலாவேலு குணசேகரன் பகுதி கழகச் செயலாளர் மோகன் நன்றியுரை மாவட்ட துணைச் செயலாளர் மூக்கன் அவர்கள் ஆற்றினார். மற்றும் கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்..