மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்… கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை அருகே உள்ள சோமையம் பாளையம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் சண்முகப்பிரியா ( வயது 34) இவர் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமுகை ஆலங்கொம்பை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடம் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு கணவர் வீட்டிற்கு சென்ற போது கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டி என்னை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதும் எனது கணவர் ஆஜராகவில்லை.இந்த நிலையில் எனது கணவர் மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வாழ்கிறார். இதற்கு அவரது பெற்றோர்கள் உடந்தையாக உள்ளனர். இது குறித்து அறிந்த அவரிடம் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிகை எடுக்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்..