தேனியில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்திய மதுரை வாலிபர் 3 பேர் கைது..!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய அடிப்படை போலீசார் நேற்று அங்குள்ள வையாபுரி நகர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த மதுரை,எல்லீஸ் நகரைச் சேர்ந்த குரு மோகன்ராஜ் மகன் கார்த்திகேயன்(19)மதுரை அன்பு நகரை சேர்ந்த முருகன் மகன் பாலசுப்பிரமணி@பாலா(19 )தமிழரசன் மகன் வசந்த்(19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் . 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..