கோவையில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது..!

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ,சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று செல்வபுரம் அசோக் நகர் ரவுண்டானா அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 300 கிராம் கஞ்சா – 8 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் செல்வபுரம் சாஸ்தா நகரை சேர்ந்த பொன்னுமணி ( வயது 24) ஆலாந்துறை போளுவாம்பட்டி ரோடு, ஹாஸ்பிட்டல் வீதியைச் சேர்ந்த சந்துரு (வயது 19) குனியமுத்தூர், ஜீவா நகரைச் சேர்ந்த ஹனீஸ் (வயது 21) என்பது தெரியவந்தது . 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..