ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் திருட்டு.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பக்கம் உள்ள செம்மனாபதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 65) விவசாயம்செய்து வருகிறார்கள்.பள்ளி விடுமுறை என்பதால் நேற்று இவர் தனது பேரக் குழந்தைகளுடன் பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்தார்.உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கவுண்டம்பாளையத்துக்கு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பூ மார்க்கெட் அருகே பஸ் சென்றபோது இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன்தங்கச் செயினை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து மயிலாத்தாள் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.