ஓடும் ரயிலில் 3 சவரன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் செல்போன், பணம் கொள்ளை- வாலிபர் கைது..!

திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்னை அண்ணாநகர் திருவள்ளூர் குடியிருப்பு ஐ பிளாக் 26 வது தெருவை சேர்ந்தவர் 45 வயதான வினோத் கண்ணா எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த போது ரயிலில் இருந்து எழுந்து பார்த்தபோது தனது பேக்கில் வைத்திருந்த ரூ 1.50 லட்சம் பணம் மூன்று சவரன் தங்கச் சங்கிலி மொபைல் ஃபோன் ஆகியவற்றை காணாமல் திக்கிட்டு எழும்பூர் ரயில்வே போலீஸில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையில் டிஎஸ்பி ரமேஷ் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீஸ் படையினர் குற்றவாளியை தீவிரமாக தேடிவந்த நிலையில் ஹரிஹரன் வயது 28 தகப்பனார் பெயர் சந்திரசேகரன் ராம்ஜி நகர் தயானூர் திருச்சி என்பவனை பிடித்து 3 சவரன் தங்க நகைகள் ரொக்க பணம் ரூ 1 லட்சத்து 50 ஆயிரத்தையும் மொபைல் போனையும் பறிமுதல் செய்தனர் . கைது செய்யப்பட்ட குற்றவாளி வழக்கு பதிவு உடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைத்தனர்..