போக்சோ வழக்கில் கைதானவருக்கு 3 ஆண்டு சிறை..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் கனகமணி (வயது 58) இவர் கடந்த 3 -7- 20 22 அன்று பொள்ளாச்சியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி சில்மிஷம் செய்தாராம். இவரை பொள்ளாச்சி அனைத்து பெண்கள் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் மீது கோவை  மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டபட்ட கனகமணிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரசீதா ஆஜராகி வாதாடினார்..