ஒரே நாளில் 3 இளம் பெண்கள் எங்கோ மாயம்..!

ஒடிசாவை சேர்ந்தவர் சுகன். இவரது மனைவி சுகன்யா (வயது 22) அன்னூர், மேட்டுப்பாளையம், அருணா நகரில் உள்ள மில் குடியிருப்பில் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் சுகன்யா யாரிடமோ நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் . இதை அவரது கணவர் சுகன் கண்டித்தார்  . இதனால் மனம் உடைந்த சுகன்யா நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர சுகன் அன்னூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதேபோல அன்னூர் பக்கம் உள்ள குரும்ப பாளையம், ஸ்ரீ கணேஷ் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் இவரது மனைவி பிரியா (வயது 19) )இவரது கணவர் ஐ.டி . வேலை பார்த்து வருகிறார். இவர் யாரிடமும் அதிகமாக பேச மாட்டாராம். இதேபோல மனைவியிடமும் அதிகமாக பேசுவதில்லை. இதனால் மனம் உடைந்த பிரியா நேற்று முன்தினம் வீட்டிலிருந்து திடீரென்று எங்கோ மாயமாகி விட்டார் .இதுகுறித்து கணவர் பிரசாந்த் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் தேடி வருகிறார்கள்.

இதேபோல் பொள்ளாச்சி நல்லூத்துக்குளி பொன்னாயூரை சேர்ந்தவர் திருமூர்த்தி .இவரது மகள் ஜமுனாராணி ( வயது 20) இவர் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து தாயார் சாந்தாமணி பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..