ஒரே நாளில் 3 இளம் பெண்கள் திடீர் மாயம் ..!

கோவை துடியலூர் என்.ஜி.ஜி ஒ காலனி, கணேஷ் நகரை சேர்ந்தவர் பூபதி. இவரதுமனைவி மகேஸ்வரி (வயது 24) இவர் கடந்த 11ஆம் தேதி அவரது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் பூபதி துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

கோவை துடியலூர் முத்து நகரை சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மனைவி காயத்ரி (வயது 21) இவர்கள் இருவரும் 20 22 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர் .ஒரு வயதில் ஒருமகள் உள்ளார் .இந்த நிலையில் காயத்ரி நேற்று திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது கணவர் ஜேக்கப் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதேபோல நீலிகோணாம் பாளையம், விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி சுஜிதா (வயது 35)விமான நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கேஷியராகவேலை பார்த்து வந்தார்.நேற்று முன் தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது கணவர் சுந்தர்ராஜ் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார்.போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்
.