ஆவடியில் கொலை, கொள்ளையில் ஈடுபட்ட 34 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..!

ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்கள் அடங்கிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க முழு அமைதியை நிலை நாட்டி பொதுமக்கள் சந்தோசமாக அமைதியாக நடமாடிட ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இம்மாதம் ஆகஸ்ட் 2024 மட்டும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொலை வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகள் ரவுடி ஒருவனுக்கு 1ம் கொள்ளை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 ரவுடிகளுக்கும் போதைப் பொருட்கள் வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகள் நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய ஒருவனுக்கும் மொத்தம் 31 குற்றவாளிகளுக்கும் முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகைக் கடை கொள்ளையில் துணிச்சலுடன் ஈடுபட்ட 3 கொள்ளையர்களையும் சேர்த்து மொத்தம் 34 குற்றவாளிகளுக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்..