கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை மட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி வினிதா ( வயது 23) இவர்களுக்கு பிறந்து 38 நாட்களான விக்னேஸ்கரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று இந்த குழந்தைக்கு பவுடர் பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்தார்.சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து வால்பாறை போலீசில் வினிதா புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
Leave a Reply