392 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மதுக்கரை பக்கம் உள்ள சீராபாளையம்,கணேஷ் நகர்,கரிசல்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதிக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசருக்கு தகவல் வந்தது .மதுக்கரை போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூர் , புதூரைச் சேர்ந்த முருகன் ( வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 209 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல திருமலையாம்பாளையம் பிரிவை சேர்ந்த நூர் முகமது ( வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டார் . அவரிடம் இருந்து 120 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது..இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.